ஜிஎஸ்டி வரியுடன் தமிழக அரசின் கேளிக்கை வரியையும் கட்ட வேண்டியிருந்தால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக திரைத்துறையினர் தெரிவித்துள் ளனர். எனவே, கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரை திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதில் நல்ல முடிவு ஏற்படாததால் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் சுமார் 1,000 திரையரங்குகள் நேற்று முதல்மூ டப்பட்டன. அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி, நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரை திரைத்துறையினர் நேற்று மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன், தென்னிந்திய வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.சுரேஷ், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து நிருபர்களிடம் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘‘பேச்சுவார்த் தையில் சுமுக முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால், திரையரங்குகளை மூடும் போராட்டம் தொடரும் நாளை மீண்டும் அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம் என்றார்.