இன்று மாலை 4.35 மணியளவில் RK நகர் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தார் நடிகர் விஷால் !
நடிகர் விஷால் இன்று காலை 7:30 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு வீட்டிலிருந்து நடந்தே சென்று சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி தி. நகரில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் இல்லத்திற்கு சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அங்கிருந்து கிளம்பி ராமாவரத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு சுமார் 8:30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து அடையாறில் அமைந்துள்ள செவாலியர் சிவாஜியின் மணிமண்டபத்திலுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு 10.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சமாதிக்கும் , முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா சமாதிக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து மாலை 4.35 மணியளவில் ஆர்.கே நகரிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் வரிசையில் நின்று விஷால் மனுத்தாக்கல் செய்தார்.சட்ட ஆலோசகர் சார்லஸ், நடிகர் விஜய் பாபு, ரமணா, R.k.சுரேஷ், உதயா ஆகியோர் உடன் இருந்தனர்.