65-வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு நிகழ்வில் இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் , குறிப்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் மொழிப் பிரச்னையால் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
பெயர்களை அறிவித்த ஜூரிகள் இந்தியிலேயே அறிவித்ததால் எந்தப் பிரிவு, எதற்காக விருதுகள் என்பது புரியவில்லை. பெயர்களையும் சரியாக சொல்ல முடியவில்லை.ஜூரிகளுக்கும் பெயர்களை சரியாக சொல்ல முடியாததால் செய்தியாளர்களுக்கு குழப்பம்.
இதனால் மிகவும் மெதுவாக சொன்னார்கள். சேர்மன் சேகர்கபூர் இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசினார்.
கேரள ஊடகங்கள் கடுமையாக விமர்சித்திருக்கின்றன.தமிழ் அவ்வளவாக எழுதவில்லை.!