தமிழ்த் திரை உலகில் அஞ்சாமல் தைரியமாக பதில் சொல்லக்கூடிய பெண்களில் லட்சுமி,குஷ்பு , அனுஹாசன், ரேவதி, என சிலர் இருக்கிறார்கள்.
இந்தியாவின் வளர்ச்சி தற்போது கற்பழிப்பு, குறிப்பாக சிறுமிகளை சீரழிப்பதில் முன்னேற்றம் காண்கிறது.குறிப்பாக பாஜக.வை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களும் கற்பழிப்பு வழக்கில் மாட்டி இருக்கிறார்கள். ஆளும் கட்சி என்பதால் எப்படியும் தப்பி விடுவார்கள் .
ஆனால் எட்டு வயது ஆசிபா என்கிற சிறுமியை இந்து கோவிலில் வைத்துக் கோரமாக உறவு வைத்துவிட்டு கொன்று வீசி இருக்கிறார்கள். பாருங்கள். அவர்கள் சுட்டுக் கொல்லப்படவேண்டியவர்கள்.நாடே கொந்தளிப்பில் இருக்கிறது.
தற்போது இங்கிலாந்தில் இருக்கிற அனுஹாசனை தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கையில் அவரது அழுகையைத்தான் கேட்க முடிந்தது.
“என்னங்க நீங்க இதற்குபோய் கருத்துக் கேட்கிறீங்க?( தப்புதான்,மேடம். ஆனால் செய்தியாளன் என செய்ய முடியும்?) என விசும்பலுக்கிடையில் கேட்டார். தொடர்ச்சியாக ” ஒரு எட்டு வயசு சிறுமிக்கு பாதுகாப்பு இல்லைன்னா…..( அழுகை.) கோரம். இதுக்குப் பதில் என் கண்ணீர்தாங்க. என்னால இதுக்கு பேசமுடியல “என முடித்துக் கொண்டார்.