தங்கத்தட்டிலே உணவு அருந்தியவர் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.அந்தக் காலத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் அவரை பார்ப்பதற்காகவே! சங்கீதம் தெரியாத பாமர மக்களும் அவரது ‘சரிகமபதநி’ சாஸ்திரிய பாடல்களை அவர்களுக்கு தெரிந்தவகையில் பாடிக்கொண்டு இருந்தார்கள்.அந்தக் காலத்து உண்மையான லட்சாதிபதி. ,இந்த காலத்தில் அந்த லட்சங்கள் பல கோடிகளுக்கு சமம்.
அத்தகைய அற்புதமான மனிதர் இறுதிக் காலத்தில் உருப்படியான முடிவு எடுக்காமல் பஞ்சையாக பார்வையற்று உயிர் இழந்தார்.
இன்னும் எத்தனையோ பேர் கோடிகளை இழந்து கடனாளியாக வாழவேண்டிய நிலை. தமிழ்ச்சினிமா பார்த்திருக்கிறது. அப்படி எல்லாம் வாழாமல் தனக்காகவும் சமுதாயத்துக்காகவும் என வரையறை வகுத்துக் கொண்டு வாழ்கிறவர்தான் லாரன்ஸ் மாஸ்டர்.
தனது தேவையை நிறைவு செய்து கொண்டு எஞ்சியதை அற வழிகளில் தானம் செய்வதுதான் அறம் என பலர் புரிந்திருக்கிறார்கள். முந்தைய மன்னர்களும் அரசு கஜானாவை நிறைவு செய்து கொண்டுதான் வள்ளல்களாக வாரி வழங்கி இருக்கிறார்கள்.
இன்றைய தமிழ்ச்சினிமா உலகில் மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்பாக இருப்பவர் நமக்குத் தெரிந்து மாஸ்டர் ராகவாலாரன்ஸ் மட்டுமே.!இன்னும் சிறப்பாக சொல்வதெனில் ஏழைக் குழந்தைகளின் இதய அறுவைச்சிகிச்சைக்கு கொட்டிக் கொடுத்து வருகிற மனிதர்..
ஆம் அவரது அன்னை அருளால்! அம்மாவுக்கு சிலை வடித்துள்ள ஒரே நடிகர்.கோவில் கட்டி வணங்கி வருகிறவர்.அம்மாவின் சொல்லே ஆண்டவனின் கட்டளையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்.
தாயில் சிறந்ததொரு கோவில் இல்லை என்பதை ஐந்து வயதிலேயே கற்றுக் கொள்ளும் மனிதனுக்கு ஐம்பதாவது வயதில் மறந்து போகிறது. ‘தாய்க்கு சிறந்தது முதியோர் இல்லமே’ என சுருங்கி விடுகிறான்.ஆனால் லாரன்ஸ் மாஸ்டர் அவரது அன்னையின் சொல்லை மறுப்பதில்லை. 6௦ குழந்தைகளை சொந்த இல்லத்தில் வைத்து வளர்த்து வருகிறார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நெகிழ்ச்சியான தகவல் ஒன்றை சொன்னார்.
சினிமா படப்பிடிப்புகளில் டான்ஸ் மாஸ்டரின் கால்களை தொட்டு வணங்கிய பின்னர்தான் நாயகன் நாயகி உள்ளிட்ட எல்லா டான்சர்களும் ஆட தொடங்குவார்கள்.இன்றும் தொடர்கிறது. லாரன்ஸ் மாஸ்டர் இதற்கு மறுப்பாளி!
“எனக்கு இந்த வழக்கம் பிடிக்கவில்லை. இதை நான் பிரபுதேவா மாஸ்டரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்” என்று உண்மையை சொல் கிறவர் இன்னொன்றும் சொன்னார்.
“நாகேஷ் சார் துள்ளிக் குதிப்பாரே அதைப் போல நானும் பதறிப் போய் துள்ளிக் குதித்து தூரமாக போய் “என்ன சார் இப்படி பண்ணிட்டிங்களே ” என பதற அவரோ ”கூல்…கூல் ” என சொல்லி அனைத்துக் கொண்டார், அந்த மாமனிதர்.அவர்தான் அண்ணன் சூப்பர் ஸ்டார். படம் ‘பாபா ” இந்த பட உலக பன்முக நடிகர்.