பங்காளிக்கு பில்லி சூன்யம் வைப்பதெல்லாம் பாட்டி காலத்து பழைய சாதம் மாதிரி ஆகிவிட்டது.இப்ப எல்லாம் குக்கர் சமையல்.பட்டிக்காட்டிலும் பழைய சாதம் கிடைப்பதில்லை. காரியம் முடியவேண்டும் என்றால் கன்னிப் பெண் பூஜை நடக்கவேண்டும் என்று யுனிவர்சிட்டியிலும் பாடம் எடுக்கிறார்கள்.
அதைத்தான் ஆந்திர திரை உலகிலும் பின்பற்றி இருக்கிறார்கள்.
நடிகர் பவன் கல்யாண் மீது அவதூறு கிளப்புவதற்காக அரசியல், 2 சேனல்கள் ,திரை உலக புள்ளிகள் சிலர்,ஸ்ரீ ரெட்டியை பயன்படுத்தி இருக்கிறார்கள்.பின்னணி தெலுங்கு தேசமாம். ராம்கோபால் வர்மாவுக்கு பவன் கல்யாண் மீது தனிப்பட்ட கோபம் உண்டு.பவன் என்பதற்குப் பதிலாக porn என்கிற ஆங்கிலச்சொல்லை பயன்படுத்தி கிண்டல் அடிப்பார்.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்.ஸ்ரீ யை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தெலுங்கு தேசம் போட்ட திட்டத்தை முறியடித்திருப்பதாகவும் சொல்கிறார்கள். அதாவது நடிகையை டெல்லிக்கு அனுப்பி அங்கு ஆர்ப்பாட்டமோ அரை நிர்வாண போராட்டமோ நடத்துவதற்கு திட்டம் போட்டு இருக்கிறது.இதெல்லாம் தற்போது தெரிய வந்திருப்பதால் திரை உலக புள்ளிகளுக்குள் புகையத் தொடங்கி இருக்கிறது.
என்னமோ போடா ராசா!