‘தல ‘அஜித்துக்கு நாற்பத்தி ஏழு வயது.!
மே 1 ம் தேதி வந்து விட்டால் 3 நாள் காணாமல் போய் விடுவார். தனக்குள் ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வாழ்பவர். லட்சுமணன் கோடு சீதைக்கு மட்டும் வால்மீகி போடவில்லை..அஜித்துக்கும்தான் போட்டிருக்கிறார் போல!
திரை உலக விழாக்களுக்கு வருவதில்லை. அவருடைய பட விழா வாக இருந்தாலும் வரமாட்டார். செய்தியாளர்களையும் சந்திப்பதில்லை.அவரைப்பற்றி தப்பாக செய்திகள் வந்தாலும் கவலைப்படுவதில்லை. ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என கலைக்கப்பட்டு விட்டாலும் சிலர் விடாப்பிடியாக அமைப்புகளை வைத்திருக்கிறார்கள்.தளபதி ரசிகர்கள்தான் இந்த அமைப்புகளுக்கு டார்க்கெட்.! தனிமனித துதியை விரும்பாமல் அவர் இருக்கலாம். அது சாத்தியமா?
இந்த வருடம் பிறந்த நாளுக்கு வழக்கம்போல அஜித் வெளியில்!
மூன்றாம் அல்லது நாலாம் தேதி விசுவாசம் பட பூஜை சத்யஜோதியில் .ஆனால் ஹைதராபாத் படப்பிடிப்பில் மட்டும் அஜித் கலந்து கொள்வார் என்கிறார்கள்.அன்று நயன்தாராவும் கலந்து கொள்வாராம். உடல் வெகுவாக இளைத்து காணப்படுகிறார் என்கிறார்கள்.
தன் மீது அரசியல் வாடை பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறாராம். அதனால்தான் அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினி,கமல்,விஷால் ஆகியோர் கலந்து கொண்ட காவிரி மேலாண்மை வாரிய கோரிக்கைக்கான போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதாக அவரது தொடர்பு வட்டத்தில் இருப்பவர்கள் சொன்னார்கள்.ஆனால் எந்த அளவுக்கு இது உண்மையாக இருக்கும் என்பது தெரியவில்லை.அவர் கலந்து கொள்ளாததற்கு வேறு உண்மையான காரணம் இருக்கலாம். இதை அவர்கள் சொன்னால்தான் புரியவரும்.இடைச்செருகல் செய்திகள் தடுக்கப்படவேண்டும்.
தனி மனித உரிமையில் தலையிட யாருக்கும் இல்லை.ஆனால் கலை உலகத்தினருக்கு இது சாத்தியமா?
சினிமா முரசம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்!