குருநாத் சலசானி தயாரித்திருக்கும் படம் “ 18.05.2009 “
இப்படத்தில்,சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தை எழுதி இயக்கியுள்ளவர் கு.கணேசன் ( இவர் ஏற்கனவே தமிழ் ஈழம் பற்றி “ போர்க்களத்தில் ஒரு பூ “ என்ற படத்தை இயக்கியவர் ).
கதை…
தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள்
2008ம் ஆண்டு இலங்கை அரசால் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட தமிழினப் படுகொலை,
18.05.2009 வரை நீடித்தது. சுமார் ஆறு மாதங்களில் ஒன்றரைலட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதையும், கடைசி நாளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள்உள்பட 40,000 தமிழ் உறவுகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது..தமிழினத்தில் பிறந்த ஒரே குற்றத்துக்காக அப்பாவிப் பெண்களைக் கூட வெறிபிடித்தமாதிரி வேட்டையாடியது சிங்கள ராணுவம்….. நீதி கேட்டுக்கதறிய அந்த அபலைகளின் குரல் ஈழத்தின் காற்றுவெளிகளில் கரைந்து விட்டது.தமிழின வரலாற்றில் ரத்தக்கறை படிந்த அந்த நாளை, எந்த சமரசத்துக்கும் இடம் கொடுத்துவிடாமல், ரத்தமும் சதையுமாகச் சித்தரித்திருக்கிறது18.05.2009. அந்த மண்ணில் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள், ராணுவத்தின் துப்பாக்கி முனையிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பதற்காகவே ஆயுதம்ஏந்தினர்….. தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், தங்கள் மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தனர்……
மரணத்தைத் தழுவும் நிலையிலும்தங்களது விடுதலை வேட்கையை வெளிப்படுத்த அவர்கள் தயங்கவில்லை….. தமிழினத்தைத் தலைநிமிரச் செய்கிற அந்த வீர வரலாற்றை அழுத்தம்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது 18.05.2009.என்கிறார் இப்படத்தின் இயக்குனர்கு.கணேசன்.
இப்படம் படம் வருகிற 18 ம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் ஒளிப்பதிவை, பார்த்திபன், சுப்பிரமணியன் கவனிக்க ,இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.பாடல்கள்: மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார்.