கையில் குச்சி வைத்திருப்பவன் எல்லாம் சிலம்பம் ஆடி விட முடியுமா? கையில் அதிகாரம் வைத்திருப்பதால் எதிரில் இருப்பவன் ஒதுங்கலாம்.ஆனால் ஓட மாட்டான் வீரனாக இருந்தால்!
ரஜினிகாந்த் எப்படிப்பட்டவர் என்பதை பிஜேபி சோதித்துப் பார்க்க விரும்புவதாக சிலர் சொல்கிறார்கள். திருமதி லதா ரஜினி மீதான சில புகார்களை மத்திய உளவுப் பிரிவினர் கேட்டுப் பெற்றிருப்பதாக தெரிகிறது.
பிஜேபிக்கு இணக்கமாக ரஜினி இறங்கி வந்தால் அல்லது ஒத்துழைத்தால் புகார்கள் நீர்த்துப் போகும்.இல்லையெனில் உரம் போட்டு வளர்க்கப்படும் என்பதாக சொல்கிறார்கள்.
பிஜேபியின் தூதர் குருமூர்த்தி முக்கால் மணி நேரம் பேசியும் ரஜினி இடம் கொடுக்கவில்லை என்கிறார்கள். பையில் கனமில்லை.மனதில் பயமில்லை என சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் தமிழ்நாட்டில் அரசியலில் இறங்கி இருக்கிற நடிகர்கள் மீது உளவுத் துறையின் கவனம் முரட்டுத்தனமாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.