சற்று நேரத்தில் அருண் விஜய்யை தூக்கிக் கொண்டுபோயிருப்பார்கள் அவர் அசந்திருந்தால்!
.துபாயில் பிரபாஸ் -ஷாகோ நடிக்கும் ஒரு தெலுங்குப் படத்தின் சேசிங் சீனை எடுத்துக் கொண்டிருந்தார்கள் .அந்த படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலத்தை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் ஆட்கள் வெயிட்டிங்.
விமானம் வந்தது.
நம்ம அருண் விஜய் லாண்டிங்!
“வந்திட்டார்யா “என்கிற மகிழ்ச்சியுடன் கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்த அட்டையை மடக்கி வைத்து விட்டு காரின் அருகில் டிரைவர் செல்ல புரொடக்ஷன் சைடில் வந்திருந்தவர் அருணிடம் நெருங்க அவரை இனொரு காரில் ஏற்றிக்கொண்டு ஒருவர் பறந்து விட்டார்,
பதறிப்போனவர் போன் செய்து விவரத்தை சொல்ல தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி!
“நாம்ப எப்ப அருண் விஜயை புக் பண்ணினோம்?” என்கிற குழப்பம்.
‘செக்க செவந்த வானம் ‘ படத்துக்காக அருண் விஜய் சென்று இருக்கிறார் என்பது பின்னர் தெரிய வந்திருக்கிறது, நல்ல வேளை இயக்குநர் மணிரத்னத்தின் படப்பிடிப்பு தப்பியது.