நடிகர் பிரசன்னாவுக்கும், சிநேகாவுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை சிநேகா கர்ப்பம் என செய்தி வெளியாவதும், அதை பிரசன்னா மறுப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.. தற்போது கடந்த சில மாதங்களாக சிநேகா எந்த படப்பிடிப்புக்கும் செல்லாமல் ,நிகழ்ச்சிகளையும் தவிர்த்து வரு கிறார். இந்நிலையில், பிரசன்னா தனது குடும்பத்தில் புதிதாக ஒருவர் வரப் போவதாகக் ட்வீட் செய்துள்ளார். அதில், “இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியத்துவமானது. மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். விரைவில் எங்கள் குடும்பத்தில் புதிதாக ஒருவர் வருகிறார்,” என்று கூறியுள்ளார். சிநேகா கர்ப்பமாக இருப்பதை தான் பிரசன்னா இப்படிக் குறிப்பிடுகிறார் என அடித்து சொல்கிறது கோடம்பாக்கம்.