“மச்சான் ..நீ பாஸாயிட்டே!” என்கிற குரல் டுவிட்டர் தளத்தில் அதிருகிறது என்றால் அது சவுந்தர்யா ரஜினியின் குரல்.!
பொதுவாக கேன்ஸ் படவிழாவில் சிவப்புக் கம்பளத்தில் நடிகைகள் நடந்து வருவதைத்தான் படம் பிடித்துப் போடுவார்கள். அதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழித்து பேஷன் டிசைனர்கள் வடிவமைக்கும் ஆடைகளை அணிந்து ,குலுங்கி நடந்து வருவார்கள்.அந்த சிரமம் நடிகர்களுக்கு இருப்பதில்லை.
கேன்ஸில் நமது ஃ பக்கிர் தனுஷ் கம்பீரமாக நடந்து சென்றது பற்றிதான் சவுந்தர்யா “உண்மையிலேயே மிகவும் பிரமாதம் தனுஷ் சார்! இந்தியாவே பெருமைப்படுகிறது” என கூறி மகிழ்ந்திருக்கிறார்.
ஃ பக்கிர் படம் அசல் ஹாலிவுட் படம்.