திரைப்படம் எடுப்பது சூதாட்டம்தான். படம் எடுப்பதற்கு பணம் பைனான்ஸ் பண்ணுகிறவன் கடனைத் திருப்பிக் கேட்க கழுத்தில் கத்தியை வைப்பான்.வசூல் சரியாக வராவிட்டால் ஆள் கடத்தல் நடக்கும் .கொடுக்க முடியாதவன் உடுத்தியிருக்கிற வேட்டியினால் உத்திரத்தில் தொங்குவான்.
இதெல்லாம் தமிழுக்கு பழக்கமாகிவிட்டது.
ஆந்திராவில் எப்படியோ!
பப்லி நடிகை சார்மி தன்னுடைய சொத்து முழுவதையும் போட்டு பூரி ஜெகனுடன் சேர்ந்து படம் எடுத்தார்.ஜெகனும் வீடு நிலம் வைத்து அவர் பங்குக்கு பணம் போட்டு எடுத்திருக்கிற படம்தான் ‘மெகபூபா’
சார்மியும் பூரியும் கணக்குப் போட்டுப் பார்த்து விட்டு கிளிசரின் போடாமலேயே அழுது கொண்டு இருக்கிறார்கள்.
போதிய கூட்டம் தியேட்டருக்கு வரவில்லை!
எப்படி மீள்வது என தெரியவில்லை. படத்தைய வாங்கிய தில் ராஜ் தைரியமாக இருக்கிறார். வசூலாகி விடும் என்கிற நம்பிக்கையா?
அந்த வெங்காயமெல்லாம் இல்லை.!
அட்வான்ஸ் பேசிஸ் சிஸ்டத்தில்தான் படத்தை வாங்கி இருக்கிறார். பாதிப்பு அவருக்கு இல்லை என்கிறது அக்கட பூமி!
நாளைக்குத் தெரியும் நம்ம பூமியின் கதை!