என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் மோதும் பயங்கர வில்லனாக அசத்திஇருந்தார் அருண் விஜய். இப்படத்தை கவுதம் மேனன் இயக்கி இருந்தார்.அஜித்தை விட இதில் அருண் விஜய் பெரிதும் பேசப்பட்டார். இந்நிலையில் அருண் விஜய்-கார்த்திகா நடிப்பில் உருவான வா படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் கவுதம் மேனன்,தான் அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் அருண் விஜய் தான் கதாநாயகன் என்றும் அதன் திரைக்கதை குறித்த விவாதத்தில் தான் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். இது குறித்து அருண் விஜய் கூறும் போது. உண்மைதான் .என்னியாரிந்தால் படத்தின் போதே இது குறித்து நான் கவுதம் மேனனிடம் பேசினேன். அவரே அதிகாரபூர்வமாக அறிவித்தால் நல்லது என்பதால் நான் மௌனம் காத்து வந்தேன்.கவுதம் மேனனின் இயக்கத்தில் நான் கதாநாயகனாக நடிப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்கிறார்.விரைவில் இப்படத்தின் கதாநாயகி மற்றும் நடிகர் ,நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.