“எனது மரணம் சதியா ,அல்லது இயல்பாக நிகழ்ந்ததா “என்பதை அந்த ஸ்ரீ தேவியே எழுந்து வந்து சொன்னால்தான் உலகம் நம்பும். இவ்வளவு நாட்களை கடத்தி விட்டு மர்மம் இருக்கிறது என்றால் அதை கேட்பவர்கள் மங்குனிகளாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கையாக இருக்குமா ? அல்லது சொல்கிறவர் சுப்பிரமணிய சுவாமி என்பதால் நம்பவும் செய்வார்கள் என்கிற நம்பிக்கையாக இருக்கலாமா?
எல்லாம் மக்கள் கையில்!.
அளவுக்கு மீறி குடித்ததால் பாத் டப்பில் மூழ்கி இறந்தார் ஸ்ரீ தேவி என்றார்கள் .அது தான் இன்று வரை அறிவிக்கப்பட்ட செய்தியாக இருக்கிறது.
ஆனால் தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த முன்னாள் காவல் துறை உயர் அதிகாரி வேத பூஷன் ” ஸ்ரீ தேவியின் மரணம் திட்டமிட்ட படுகொலைதான்” என அறிக்கை வாசித்திருந்தார். அதற்கு நோ ரியாக்சன் !
சுப்பிரமணியசுவாமி தற்போது சுற்றலில் விட்டிருக்கிறார்.”மறு விசாரணைக்கு உத்திரவிடவேண்டும்” என்பதாக!
நிழல் உலக தாதாக்களின் பிடியில்தான் பாலிவுட் இருக்கிறது என்பது அரசு அறிந்த ரகசியம்தான்.. இதனால்தானோ என்னவோ “ஸ்ரீதேவியின் மரணத்தில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு இருக்கலாம் .அந்த ஜோமேய்ரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டல் தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடையது”என்கிறார்கள். சிலர் அவர்தான் உரிமையாளர் என்கிறார்கள்.
உலக துப்பறியும் ஜேம்ஸ் பாண்டுகளாலும் கண்டு பிடிக்க முடியாத இந்த தாதாவைப் பற்றி யாராவது படம் எடுங்களேப்பா!
ஓ! எடுத்தால் ஆதார் கார்டு இல்லாமல் போய் விடுமோ?