அந்த கிளியோபாட்ரா உயிரோடு இருந்திருந்தால் அழகு டிப்ஸ் கேட்க கரீனா கபூர் வீட்டு வாசல் கதவைத்தான் தட்டியிருப்பாள்.
எத்தனையோ பேர் வளைத்துப் போட பார்த்தார்கள்.வாகான உடம்பு. கோவில் சிலை என செதுக்கப்பட்ட அழகிய அங்கங்கள். அசைந்து ஆடினாலே ஆழித்தேர் வருவதைப்போல் இருக்கும். அத்தனை நடிகர்களையும் ஏக்கப்பெருமூச்சு விடச்செய்த புண்ணியவதி கடைசியில் சையீப் அலிகானை கரம் பிடித்தார். அவர் கல்யாணம் முறிந்து பிள்ளையோடு வாழ்ந்தாலும் காரியவாதி.
நமக்கு எதுக்கு அதெல்லாம்.?
“அம்மா கரீனா? ஆண்-பெண் சமத்துவத்தில் நம்பிக்கை இருக்கா?”
“இருக்கு! அதனால நான் பெண்ணியவாதின்னு சொல்லிக்கமாட்டேன்!”
“ஏம்மா?”
“நான் ஒரு பெண். அதுக்கும் மேல ஒரு மனுஷி.இது பத்தாதா? சையீப் அலிகானின் மனைவின்னு சொல்வதில்தான் எனக்குப் பெருமை.! இது போதாதா?” என்கிறார் கரீனா!
அப்படி என்ன மந்திரக்கோல் வைத்திருக்கிறார் சையீப்? இப்படி மயங்கிப் போய் இருக்கிறாரே!