படுக்கையில் படுத்து விட்டால் சிலர் அமாவாசை பார்ப்பார்கள்.
‘கனத்த நாள்’ பார்ப்பார்கள். ஜாதகங்களையும் அலசுவார்கள்.
ஆள் பிழைக்குமா ,போய்ச்சேருமா என்பதில் உறவுகளுக்கும் உள்ளுக்குள்ளேயே ஆசை இருக்கவே செய்யும்!
கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போய் அறுந்து விழுந்த மூக்கு பாஜக மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தி விட்டது. அனைத்து முக்கிய கட்சிகளும் ஒன்று கூடி விட்டதால் சிலஆங்கில நாளேடுகள் கருத்துக் கணிப்பில் இறங்கி இருக்கின்றன.
19 மாநிலங்கள், 15859 பேர்களிடம் கணித்ததில் மோடி “மறுபடியும் வந்து விடக்கூடாது “என 47 சதவீத மக்களும், 39 சதவீத மக்கள் “பிரதமருக்கு தகுதியானவர்தான் “என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
“அதான் இன்னும் நாள் இருக்கே,அதற்குள் என்ன அவசரம் “என்று பதினான்கு சதவீத மக்கள் ஒதுங்கி விட்டார்கள்.