எவராக இருந்தாலும் முதல் அனுபவம் என்பது மனதில் பச்சைக்குத்திக் கொள்வதைப்போல!
மறக்க முடியாது,!
இனிமையான நிகழ்வாக இருந்தாலும், இன்னல் தந்தவையாக இருந்தாலும் அவைகள் அவ்வப்போது கனவு போல வந்து போகும். அது ஒருவகையில் ஆறுதலாகவும் இருக்கும்.
அதைப்போலத்தான் இலியானாவின் முதல் கேமரா அனுபவமும்!
“முதல்நாள் படப்பிடிப்பு. படபடப்பாக இருந்தது, நெர்வஸாக இருந்தது, செட்டில் இருந்தவர்கள் ‘இதெல்லாம் எங்கே தேறப்போகுது. பேசாமல் சொந்த ஊரான கோவாவுக்கு திரும்பிப் போய்விடவேண்டியதுதான்’ என்று என் காதுபடவே பேசுகிறார்கள். எனக்கு அப்போது பதினெட்டு வயசு..ஸ்டுடியோவை விட்டு வாசலுக்கு வந்து அழுது தீர்த்தேன். வேறு என்ன செய்ய முடியும்” என்கிறார் இலியானா.