கர்நாடக மாநிலத்தில் கடுமையாக மழை பொழியுமேயானால் ஒரு பயலாலும் தடுக்க முடியாது.தாயைக்கண்டதும் தாவி வரும் மழலையைப்போல காவிரி பாய்ந்து வரும் தமிழகத்துக்கு.!
ஆனால் அதை சேமித்து வைப்பதற்குத்தான் தமிழகத்தில் துப்பில்லை.கடலில் கலந்து வீணாகிவிடும். வரட்சி காலத்தில் தண்ணீர் கேட்டுப் போராடுவது தமிழர்க்கு வழக்கம். போராடி போராடி அலுத்துப் போனதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விவசாயிகளுடன் சேந்து தமிழ்த் திரை உலகத்தினர் கடுமையுடன் போராடினர்.
வத்தல் நாகராஜ் என்கிற ஒத்தை ஆளுக்கு கர்நாடகாவில் மரியாதை கிடையாது.நடந்த தேர்தலில் டிபாசிட்டே காலி. ஆனால் அந்த வத்தல் நாகராஜ் தியேட்டர்களுக்கு சென்று தமிழ்ப்படங்களின் போஸ்டர்களை கிழித்து நாசம் செய்வது வழக்கம் .அதை ஊடகங்களும் பெரிது படுத்தும். அப்படிப்பட்ட ஆளுக்குப் பயந்து கமல்,ரஜினி ஆகியோரின் படங்களை திரையிடப்போவதில்லை என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்திருக்கிறது.
தூத்துக்குடிக்கு இன்று புறப்பட்டு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் வழக்கம் போல கேள்விகள் கேட்கப்பட்டன.அதில் காலா படம் தடை பற்றியும் கேட்கப்பட்டது.
“நடிகனாக என்னைப் பார்த்ததும் தூத்துக்குடி மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். காலா படத்துக்கு கர்நாடக பிலிம் சேம்பர் தடை விதித்திருக்கிறது.தென்னிந்திய பிலிம் சேம்பர் ஆப் காமர்சின் ஒரு அங்கம்தான் கர்நாடக பிலிம் சேம்பர். அதனால் உட்கார்ந்து பேசி முடிவு செய்யலாம்.”என்று சொல்லி இருக்கிறார்.
இந்த பேச்சு வார்த்தையில் உலகநாயகன் கமல் படம் பற்றியும் பேசுவார்களா? ஒன்லி காலா மட்டும்தானா?