தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடைத்தை பிடித்துக் கொண்டுள்ள பாடலாசிரியர் பா.விஜய். ‘ஞாபகங்கள்’, ‘இளைஞன்’ ஆகிய படங்கள் மூலம் சினிமாவில் ஒரு நடிகராகவும் களமிறங்கினார்.! இந்த படங்களை தொடர்ந்து ‘தகடு தகடு’ என்ற படத்திலும் நடித்துள்ள பா.விஜய், அடுத்து தயாரிப்பாளர், இயக்குனர் ஆகவும் களமிறங்க உள்ளார். ‘வில் மேக்கர்ஸ்’ என்ற பெயரில் புதிய பட நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ள பா..விஜய் தனது நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இப்படத்தை இயக்கி, தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.ஏற்கெனவே கமல்ஹாசன், பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோர் சொந்தமாக படங்களை இயக்கி, தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.! தற்போது, இப்பட்டியலில் பா.விஜய்யும் இடம் பிடித்து விட்டது குறிப்பிடத்தக்கது.