பெயரை எழுதத் தெரியாதவனாக இருந்தாலும் மந்திரி ஆகி விட்டால் அவனுக்கு ஐ.ஏ,எஸ், ஐ.பி.எஸ்.எல்லாம் சல்யூட் அடிக்கவேண்டும். ஜனநாயகத்தின் பெருமைகளில் இதுவும் ஒன்று. உழைத்து முன்னேறுவதை விட வார்டு கவுன்சிலர் ஆகி விட்டால் ராஜபோக வாழ்க்கை தான்!.பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து விட முடியும் .இந்த தலைமுறையினருக்கு இதுதான் தெரிந்திருக்கும் அரசியல்.
இதை அடிப்படையாக வைத்துதான் இயக்குநர் செல்வராகவன் என் ஜி கே ‘எடுக்கிறாரோ.! மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என்று சொல்வது மாதிரி நந்த கோபாலன் குமரன் என பெயர் வைத்து சுருக்கி இருப்பது அதற்காகத்தானோ?
அது என்னவோ படம் வந்தால் தெரியப்போகிறது. ஆனால் கிடைக்கும் தகவல்களைப் பார்த்தால் நல்ல அரசியல்வாதியாக சூர்யா வேடம் கட்டி இருக்கிறாரோ என்கிற டவுட்டும் வருகிறது. வெள்ளை வேட்டி,வெள்ளைச்சட்டை என்பது அரசியல்வாதிகளின் சீருடை. அந்த சீருடையில் சூர்யா, அவரது மனைவியாக நடிக்கிற சாய் பல்லவி சிம்பிள் காட்டன் புடவையில்! அப்படியானால் அவர் நேர்மையான அரசியல்வாதியாகத்தான் இருக்க முடியும்!
எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்சின் என்ஜிகே தீபாவளி ரிலீசாம்!
அது சரி ‘கடைக்குட்டி சிங்கத்தில் சூர்யாவின் பங்கு அதாவது அவருக்கு என்ன கேரக்டர்?