“காவிரி மேலாண்மை வாரியம் அமையணும்னு சொன்ன வார்த்தையை ரஜினி வாபஸ் வாங்கனும்..பேச்சு வார்த்தை வழியா பிரச்னையை கவனிச்சிக்கலாம்னு சொல்லணும். இந்த ரெண்டும் நடந்தால் காலாவை ரிலீஸ் பண்ணிக்கோ”என்று கன்னட அமைப்புகள் சொல்லிவிட்டன.
நீதி மன்றம் தலையிட முடியாது என்று அறிவித்து விட்ட பிறகு கன்னட அமைப்புகள்தானே முறுக்கிக்கொள்ள முடியும்?அவர்கள் கையில் இப்போது சாவி இருக்கிறது..என்ன சொல்லப்போகிறார் ரஜினி?
கொள்கையில் உறுதியா?அல்லது தொழிலுக்கு சலுகையா?
பொதுவாக பிரச்னை என்று வந்து விட்டால் சமரசம் செய்து கொள்ளத்தான் பார்ப்பார்கள்.அப்படித்தான் ரஜினியும் இருப்பார் என்று நம்பலாம். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா! ரஜினிதான் இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லையே!
கமல்ஹாசனை பொருத்தவரை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்பதை நேற்றே கர்நாடக முதல்வர் சாட்சியாக சொல்லிவிட்டார். ஆகவே அவரது லைன் கிளீன்.
இப்போது நல்ல நேரம் யாருக்கு?