நடிகை ராய் லட்சுமி , வழக்கமாக தனது ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் ஏதாவது ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று , அங்குள்ளவர்களுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறி பரிசுகள் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டும் சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் சென்ற ராய் லட்சுமி. அங்குள்ள குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடி அவர்களோடு ஆடிப்பாடி மகிழ்ந்தார். பின்னர் இனிப்புகள் வழங்கியதோடு . தன் கையால் சில குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். தொடர்ந்து,அனைத்து குழந்தைகளுக்கும் நோட்டுப் புத்தகங்கள் உள்பட பல உதவிப் பொருட்களை இலவசமாக வழங்கியது மட்டுமல்லாமல் . அவர்களுக்கு தன் கையால் உணவு பரிமாறினார். இது குறித்து ராயலட்சுமி கூறுகையில், ” ஆண்டு தோறும் என் பிறந்த நாளை இப்படித்தான் கொண்டாட நினைக்கிறேன். விரும்புகிறேன். சில ஆண்டுகளில் ஷூட்டிங்கில் இருந்தாலும்கூட, இந்த உதவு சரியாக போய்ச் சேர வேண்டும் என்பது என் ஆசை,” என்கிறார்.