“ஹாங் ..மல மல மருத மல ..”என்று மகத் தனது புட்டத்தை தடவிக் கொண்டே சோகத்தில் ( செம நடிப்பு.) இருந்த மும்தாஜை சிரிக்க வைக்க முயற்சித்ததை காட்டினார்கள் .அது படு செயற்கையாக இருந்ததை பிக் பாஸ் கவனிக்கவில்லையோ?
மகத்துக்கு சினிமா இண்டஸ்ட்ரியில் ‘எவ்ளோ நல்ல பேரு’ என்பது தெரிந்திருந்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கி இருப்பது பிக்பாசின் ராஜ தந்திரம்.அவரும் எதிர்பார்த்தபடிதான் நடந்து கொண்டு வருகிறார்.
ஐஸ்வர்யாவும் யாசிகாவும் சமாதானம் அடைந்து கட்டிப்பிடித்தபோது மகத்தும் அவர்களை சேர்த்து அணைத்து சூடேற்றிக் கொண்டது நமக்கு அநாகரீகம்.பிக்பாசுக்கு நவ நாகரீகம். அதைதானே பார்வையாளர்களும் விரும்புகிறார்கள். மகத் பெண்கள் பக்கம்தான் பெரும்பாலும் அலைகிறார். “யூ நாட்டி ” என்று பெண்ணின் கன்னத்தில் குத்துகிறார் .பதிலுக்கு அந்த பெண்ணும் குத்துகிறார்.காதலர்கள் என்கிற இமேஜ் கிடைத்திருக்கிறது பிக்பாஸ்.!இதை வைத்துக் கொண்டு புதுக்கதைகளை உருவாக்கலாம்.
“ஆங்கிலத்தில் பேசக்கூடாது” என்பது விதி .ஆனால் பெரும்பாலும் ஆங்கிலம்தான் கரை புரண்டு ஓடுகிறது. தமிழ் தெரியாதவர்களை உள்ளே விட்டுக்கொண்டு ஆங்கிலம் பேசாதே என்று கட்டளை இடுவது நம்மை ஏமாற்றத்தான்!
“உன்னை டிஸ்டர்ப் பண்றான் சீரியஸா சொல்றேன்.அப்பிடுவேன்” என்று காதலிக்காக ( ?) என்று மகத் மிரட்டுவது நாளைய நாட்களில் நடக்கப்போவதற்கான முன்னோட்டமா என்பது தெரியவில்லை! உமா ரியாஸ்கான் புத்திரன் மீது பழி விழுமா?
இரண்டு இளவட்டங்களுக்கு இரண்டு கவர்ச்சி நடிகைகள் என முடிவு செய்து நேர்ந்து விட்டிருக்கிறார்களில்! இனி வரும் நாட்களில் விளைவுகள் அமோகமாக இருக்கலாம்.
சென்றாயன் -வைஷ்ணவி இடையேயான தலைமைப் போட்டிக்கான “அணைத்தல்’ சங்கதி சுவாரசியமாக இருந்ததே சென்றாயனால்தான். அவரது ‘கக்கூசெல்லாம் கழுவினேனே,பாராட்டு இல்லையா ?” என்று ஆதரவு திரட்டலை ரசிக்க முடிந்தது.ஆனால் பிக்பாசின் விதியை மறந்து மகத்திடம் கணக்குப் பார்த்ததுதான் வம்பாகிப் போனது. ரகசியத்தைக் காக்கத் தெரியாத பிள்ளை,!
வாலிப பையனின் மனதை நோகடித்திருக்கிற சம்பவமும் நடந்திருக்கிறது. பாவம் ரியாஸ்கானின் பிள்ளை.”நானென்ன பொம்மையா ,நானும் மனுசன்தானே?” என்று புலம்புகிற அளவுக்கு ஏதோ நடந்திருக்கிறது.
நீக்கப் பட்டியலில் மும்தாஜ்,பாலாஜி,பொன்னம்பலம்,அனந்த்,நித்யா ஆகிய ஐந்து பேர் இருந்தாலும் வெளியேறும் வாய்ப்பு பொன்னம்பலம் அண்ணாவுக்குத்தான் அமோகமாக இருக்கிறது என்பது நமது கணிப்பு.அனந்த் ,பாலாஜி இருவரும் விஜய் டிவி ஆட்கள். அனந்துக்கு தற்சமயம் சூப்பர் சிங்கரில் வேலை கிடையாது.அங்கு பைனல் வரை வந்து விட்டார்கள். மும்தாஜின் அடம் நிகழ்ச்சிக்கு தேவை.நித்யா இருக்கும் வரை பாலாஜி இருந்தாக வேண்டும்.அவர்களை சமரசப்படுத்தி வைத்துதான் வெளியில் அனுப்புவார்கள். ஆக மிச்சம் பொன்னம்பலம்தான் மாட்டுவார்.பார்க்கலாம்.