களை கட்டவேண்டிய கல்யாண வீடு.கலை இழந்து கலவர வீடாகி இருக்கிறது ஊட்டியில் !
பாலிவுட்டில் ஒரு காலத்தில் கொடி கட்டி வாழ்ந்தவர்தான் மிதூன் சக்ரவர்த்தி. நடிகை யோகிதாபலியை காதலித்து கல்யாணம் செய்தவர் .இவர்களுக்கு மகா அக்சாய் என்றொரு மகன்.இவருக்குத்தான் நேற்று 7 ம் தேதி ஊட்டியில் கல்யாணம் நடத்துவதாக இருந்தது, மிதூன் சக்கரவர்த்திக்கு ஊட்டியில் மிகப் பெரிய ஹோட்டல் இருக்கிறது. ஹெலிகாப்டர் இறங்கும் வசதி உண்டு.
அம்மா யோகிதாபலி ,மணமகன் மகா அக்சாய் இருவர் மீதும் போஜ்புரி நடிகை ஒருவர் புகார் செய்து டில்லி கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்திருந்தார், நடிகர் தன்னை கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி கற்பழித்து விட்டார். உருவான கருவையும் கலைத்து விட்டனர். யோகிதாபலி தன்னை பயங்கரமாக மிரட்டியதாகவும் சொல்லி இருந்தார். புகாரும் போலீஸ் நடவடிக்கையும் நிலுவையில் இருந்த நேரத்தில்தான் கல்யாணத் திட்டம். ஆனால் போலீஸ் விசாரணைக்குழு ஊட்டிக்கு வந்து விட்டதால் கல்யாணம் நடக்கவில்லை. மணமகள் வீட்டார் மும்பைக்கு கிளம்பி விட்டார்கள். வழக்கை சந்திப்பதற்காக மணமகன் வீட்டாரும் மும்பை பறந்து விட்டார்கள்.