எந்த நேரத்தில் விபசாரம் நடத்தியதாக தெலுங்கு தம்பதியரை சிக்காகோ போலீஸ் கைது செய்ததோ தெரியவில்லை. கழிவு நீர்க் கால்வாயிலிருந்து கரப்பான் பூச்சிகள் கிளம்புவதைப் போல ஆந்திரப் பத்திரிக்கைகள் பிரபலமான நடிகைகளின் பெயர்களை அள்ளிவிட்டன. மிஸ்டர் சந்திரமவுலி நடிகை ரெஜினா கசன்டிரா அதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.
“எனது பெயர் தேவை இல்லாமல் இழுக்கப்படுகிறது.மீடியாக்கள் அம்மாதிரியான செய்திகளை வெளியிடுகிறபோது உண்மைகளை அறிந்து வெளியிடவேண்டும். நான் அந்த ரிப்போர்ட்டுகளைப் பற்றி கவலைப்படவில்லை. பொய்யான செய்திகளுக்கு எதுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும் என்று பேசாமல் இருந்தேன். மலிவான பப்ளிசிட்டி எனக்கு வேண்டாம் “என்கிறார் ரெஜினா.
சமத்துப் பொண்ணு.!