பிரசாந்தின் சாஹசம் படத்திற்காக இசையமைப்பாளரும் முன்னணி பாடகருமான ஷங்கர் மகாதேவன் பாடிய பாடல் மும்பையில் பதிவாகியது.
பெண்களை கவரும் வண்ணம் பாடலாசிரியர் கபிலன் எழுதிய
“பட்டுசேலை வாங்கி தந்தா
பொம்பளைக்கு புடிக்கும்
அத கட்டி உட சொல்லி கேட்டா
ஆம்பளைக்கு புடிக்கும்…என இளசுகளை கவர்ந்து இழுக்கும் வண்ணம் கபிலன் எழுதிய இந்த பாடலை ஏற்கனவே ஷ்ரேயா கோஷல் மும்பையில் பாடி பதிவானது. இப்போது சாஹசம் படத்தில் பிரஷாந்த் பாடும் வரிகளை சங்கர் மஹாதேவன் பாடியது மிகச்சிறப்பாக வந்துள்ளது. நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் ஏற்கனவே இன்றைய இளசுகளின் இசை சுனாமியாக திகழும் அனிருத் மற்றும் நடிகை லஷ்மி மேனன், ஆண்ட்ரியா இந்தியாவின் சிறந்த பாடகர்களான மோஹித் சவ்ஹான், ஹனிசிங், அர்ஜித் சிங் ஆகியோரை பாட வைத்துள்ளார்.
மும்பையில் சங்கர் மகாதேவன் பாடல் பதிவாகும்போது உடனிருந்த பிரஷாந்த் உற்சாக மிகுதியில் ரிக்கார்ட்டிங் தியேட்டரிலேயே மகிழ்ச்சியோடு ஷங்கர் மஹாதேவனை கட்டித் தழுவி பாராட்டினாராம்.