பாலாவின் படத்தில் அகோரியாக வந்து அனைவரையும் அசத்தியவர் அகோரி! அதே வேடமேற்று திரைக்கு வருகிறார் சாயாஜி சிண்டே.
ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா’ மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து அகோரிப் படத்தை தயாரித்திருக்கிறார்.. படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் டி.எஸ்.. ராஜ்குமார் .
ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை, இது ஒரு முழுமையான எண்டர்டெய்ன்ட் படம் .
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பவர், படத்தின் கதை தன் தோற்றம் எல்லாம் கேட்டதும் உடனே நடிக்கச் சம்மதித்து இருக்கிறார். பாரதியாராக நடித்து தமிழில் கால் ஊன்றியவர்
சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரித்வார் செட் அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி அண்மையில் படமாக்கப்பட்டது. கேரளாவின் காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடித்திருக்கிறார்கள்..
படத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். இவரது உயரம் 6.5 ” ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார், இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர், மற்றும் . மைம் கோபி , சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, சரத், டிசைனர் பவன், இவர்களுடன் கூத்துப்பட்டறை பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். கேரளாவில் புகழ் பெற்று வரும் ஃபோர் மியூசிக் . நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது., , வசனத்தை தயாரிப்பாளர் ஆர்.பி பாலா எழுதியுள்ளார்.
நடிகர் சாயாஜி ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில் ” தமிழில் பாரதி படம் எனக்கு அழுத்தமான அறிமுகம் கொடுத்தது. அதன் பிறகு குணச்சித்திரம் , வில்லன் ,நகைச்சுவை என்று விதவிதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிக்கக் கேட்ட போது அவர்கள் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது. இப்படத்தில் நான் ஓர் அகோரியாக அதாவது சிவனடியாராக நடிக்கிறேன். நான் அகோரியைச் சந்தித்து இருக்கிறேன். அவர்களின் ஆசியையும் பெற்று இருக்கிறேன். அப்படிப்பட்ட அகோரியா க நானே நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாத்திரமும் அதன் தோற்றமும் நடிப்பும் என் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.