மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில்பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி , தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர்.பிரபு ,பைவ் ஸ்டார் கதிரேசன் , நடிகர் பார்த்திபன் , மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.கே.செல்வ மணி பேசியதாவது:-
இந்தியாவிலேயே முதன் முதலில் தயாரிப்பாளர்கள் தங்களுக்கென மாஸ்டரிங் யூனிட்டை உருவாக்கியிருப்பது இதுதான் முதல் முறை.அதற்கு உதவியாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும்,மார்ட்டின் குருஷ் கம்பெனிக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .தமிழ் திரைப்பட துறையில் மாஸ்டர் யூனிட் ஆரம்பிக்கப்படும் என உறுதிமொழி கொடுக்கப்பட்டது இன்று அது முதல் படி எடுத்து வைத்திருக்கிறது…100% இது வெற்றி அடைந்தது.இது ஒரு நல்ல நிறுவனம் முதல் அடி எடுத்து வைத்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தன் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான முதல் ஆரம்பம்.இதன் விலை தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.இது யாருக்கும் எதிராக ஆரம்பிக்கபட்டதல்ல.
விழாவில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நாற்காலிகள் எல்லாம் பின்னாடி இருந்தது நாங்க தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னாடி தள்ளிட்டு வந்தோம். தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு வரும் வழி இந்த நாற்காலிகளை முன்னுக்கு கொண்டு வருவதுதான்.”என்றார்.
விழாவில் தயாரிப்பாளர் சங்க பொருளாளர்எஸ்.ஆர்..பிரபு பேசியதாவது:-
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.மூன்று மாதத்திற்கு முன் ஆளுக்கொரு கருத்துக்களையும் விவாதத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.அடிப்படை பிரச்சனை என்னவென்று பார்த்த போது தயாரிப்பாளர்களுக்கு சுய சார்பு நிலை என்று சொல்லலாம்.அதன் தொகுப்பை நாமே மேற்கொண்டு திரையரங்கத்திங்கு கொண்டு செல்லும் விஷயம் .தயாரிப்பாளர் சங்கம் மூலமே மாஸ்டர் மற்றும் கண்டன்ட் டெலிவரி செய்ய வேண்டும் என்று தோன்றியது.பல நிறுவனங்கள் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்து இதை கொண்டு வர வேண்டும் என முன் வந்தார்கள்.தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மாறலாம் ஆனால் அதன் முயற்சிகள் மாறாது.நல்ல டெக்னாலஜியை அதை நன்றாக தெரிந்தவர்கள் எடுத்து சென்றால் அது நீண்ட நாள் நிலைக்கும்.இதற்கு கார்த்தி போன்ற நண்பர்கள் துணை நின்றார்கள். கார்த்தி அல்பர் ஆகியோருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.