என்னிக்கி வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடுன்னு சொன்னாய்ங்களோ அன்னிக்கே அடிமைச்சாசனத்தில் கை நாட்டு வச்சிட்டாய்ங்கன்னு ஆகிப் போச்சு. இன்னிக்கு வந்து அந்த ஆதிக்கம் இந்த ஆதிக்கம்னு கத்தி கலாட்டா பண்ணி ஒன்னும் ஆகப்போறதில்ல.
இந்த நிலைமைய்ல நம்ம ஐஸ்வரியா ராஜேஷ் பொண்ணு கிடந்து கொந்தளிக்கிது.
“தமிழ்நாட்டில் தமிழ் நடிகைகளுக்கு இடம் இல்லை.இந்தி,மற்றும் மலையாள சினிமாக்களில் அந்தந்த மாநில நடிகைகளுக்கு இடம் இருக்கு.மரியாதை இருக்கு! நமக்கு என்ன இருக்கு?”
கேள்வி நியாயமானதுதான்! இயக்குனர்ஸ் …உங்க பதில் என்ன?