இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு விஜய் தனது டப்பிங் பணியை தொடங்கிவிட்டதாகவும், இன்னும் சில நாட்களில் அவருடைய பகுதியின் டப்பிங் பணி முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.இந்த படம் சரித்திர கதையின் பின்னணியை கொண்டுள்ளதால் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கிராபிக்ஸ் டெக்னிஷியன்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த படத்தின் அனைத்து பணிகளையும் விறுவிறுப்பாக முடித்துவிட்டு படத்தை செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர். விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, பிரபு, ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஸ்டன்ட் இயக்குனர் விஜய்யின் சண்டைக்காட்சி குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், “ஆமாங்க.. இந்திய சினிமாவுல சண்டைக் காட்சிகள் ரசிகர்களை ஏமாற்றும் விதமாகத்தான் இன்றளவும் இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டேயிருக்கிறது. எங்கள மாதிரி ஸ்டண்ட் ஆட்கள் ஒரு படத்தில ஒரு ஆக்ஷன் சீன் எடுக்கணும்னா அந்த கதையை மீறாத ஒரு சண்டைக்காட்சியாகத்தான் எடுக்க வேண்டியிருக்கு, ஹாலிவுட்ல வர்ற மாதிரி எங்களால் சண்டைக்காட்சிகள் எடுக்க முடியும் அந்தளவுக்கு திறமையும் எங்களிடமிருக்கு, அதைத்தான் தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘புலி’ படத்துல நாங்க எகிறி அடிச்சிருக்கோம். புலி படத்துல சண்டைக்காட்சிக்கு மட்டும் 84 நாட்கள் நாங்க செலவழிச்சிருக்கோம், இந்த படத்துல வர்ற சண்டைக்காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் அதை நீங்க தியேட்டர்ல பார்த்தா உங்களுக்கு தெரியும்,” என்றார்.