பொய்யான சண்டை. போலியான ரத்தம். ஸ்பீடு கேமரா, இப்படிப் பழகிப்போன சினிமாக்காரர்கள் நிஜமாகவே கத்திக்குத்து பார்த்தால்?
செமையா இருக்கும்ல!
இன்னிக்கு நடந்துச்சு. பிரபுதேவா கேத்தரின் தெரசா நடித்துவருகிற ஒரு படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி வில்லியனூர் கோவிலில் நடந்தது. அருகில் இருந்த மண்டபத்தில் படக் குழுவினருக்காக உணவு வழங்கப்பட்டது. வேடிக்கைப் பார்க்க வந்திருந்த இரண்டு பேர் கூட்டத்துடன் கூட்டமாக வந்து தங்களுக்கும் உணவு பரிமாறும்படி கேட்டிருக்கிறார்கள்.
பிறகென்ன தகராறுதான்!
உடனே வாழை இலை வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து படக்குழுவைச் சேர்ந்தவரை குத்திவிட்டார்கள். படக்குழுவைச் சேர்ந்தவர்கள் மடக்கிப் பிடித்துப் போலீசில் ஒப்படைத்திருக்கிறார்கள். காயம் பட்டவர் சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.