கவிஞர் பெருமகனே! கண்ணதாசனே!! உங்களைப் போல வர்ணிக்கத் தெரியாவிட்டாலும் உமது பாடலைத் திருடத் தெரியும். சன்னி லியோனைப் பார்த்ததும் உங்களது சாகா வரிகள்தான் நினைவுக்கு வந்தன.
நனைந்த மெல்லிய ஆடை. மேனி தழுவும் மெலிந்த காற்று. அடடா. அருகில் நிற்க முடியவில்லையே என்கிற ஏக்கம். பெருமூச்சு.! பாறை செய்த புண்ணியம் கூட நாம் செய்யவில்லையே என வாலிப பட்டாளம் வாடும். வருத்தம் வாட்டும் .அந்த இரண்டு சூரிய காந்தி பூக்களும் சன்னியின் முகம் நோக்காமல் வெட்கி தலை குனிந்தனவோ! “பாலாடை போன்ற முகம் மாறியதேனோ!பனி போல நாணம் அதை மூடியதேனோ!”