காவேரி மருத்துவமனையில் கலைஞர் அனுமதிக்கப்பட்டு இன்று 11 வது நாள். மஞ்சள் காமாலையினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு பிற அவயங்களின் செயல்பாட்டினை குறைத்து விட்டதாகச் சொல்கிறார்கள். 24 மணி நேர கண்காணிப்புக்குப் பின்னர்தான் உறுதியான முடிவுக்கு வர முடியும் என தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் கலைஞர் ,
இன்று காலை கனிமொழி, செல்வி, ராஜாத்தி அம்மாள் ,ஆகியோர் வந்தனர் .ஸ்டாலின் அழகிரி மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையிலேயே இருக்கிறார்கள். தொண்டர்கள் இரவிலிருந்து அங்கயேதான் இருக்கிறார்கள் .
போலீசார் பாடுதான் பெரும்பாடு. ஆத்திர அவசரங்களுக்குக் கூட ஒதுங்குவதற்கு படாதபாடு படுகிறார்கள்.150 ஆயுதப்படை போலீசார் காவேரி மருத்துவமனையில் இருக்கிறார்கள் .6௦௦௦ ஆயுதப்படைப் போலீசார் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
மருத்துவமனையைச் சுற்றிலும் “எழுந்து வா தலைவா” “கலைஞர் வாழ்க” என்கிற முழக்கம்தான் கேட்கிறது. கூட்டம் கூட வேண்டாம் என திமுக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டாலும் தொண்டர்கள் கேட்பதாக இல்லை. டிவிட்டரிலும் ஹெஷ்டாக் தேசிய அளவில் பிரபலமாக இருக்கிறது.