கலைஞர் கருணாநிதியின் உள் உறுப்புகள் தொடர்ந்து மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் அவரது உடல் நலத்தில் மேலும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இது மிகவும் அதிர்ச்சியான செய்தியாகும். அபாயத்தின் விளிம்பில் இருப்பதாகவே சொல்லலாம்.
முதல்வரை ஸ்டாலின்,அழகிரி ஆகியோர் சந்தித்ததும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக உள்துறை செயலர் கிரிஜா வைத்திய நாதனை அழைத்துப் பேசியதும் கலைஞரின் கவலைக்கிடமான நிலையை சுட்டிக் கா ட்டுவதாகவே இருக்கிறது. மருத்துவமனைக்குள் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ஹிஸ் கண்டிஷன் எக்ஸ்ட்ரீம்லி கிரிடிகல் அண்ட் அன்ஸ்டேபிள் என சொல்கிறது அவரது மருத்துவ அறிக்கை.அவர் இறுதிக்கட்டத்தை நெருங்குவதாகவே இதற்கு பொருள் சொல்லலாம்.