நான் ஈ’ படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பாகுபலி’. இப்படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இந்திய திரையுலகின் பெருமைக்குரிய படமாக உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, தென்னிந்திய ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்டு, யூடியூப்பில் அதிக பார்வையாளர்களால பார்க்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீட்டுக்காக இன்று காலை சென்னை வந்துள்ள இயக்குநர் ராஜமவுலி, சென்னை அண்ணாசாலை ஹயாத் ஓட்டலில், செய்தியாளர்களிடம் கூறியதாவது, தென்னிந்திய அளவில் பிரமாண்டமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், எஸ்.எஸ். வாசனால் தயாரிக்கப்பட்டு, டி.ஆர். ராஜகுமாரி ,எம்;கே.ராதா .ரஞ்சன், ஆகியோர் நடிப்பில் 1948-ல் வெளியான பிரமாண்டமான சந்திரலேகாவை மிஞ்சுமா எனக் கேட்கிறார்கள். எவ்வித வசதியும் இல்லாத அந்தக் காலத்திலேயே மிக பிரமாண்டம படமாக உருவானது சந்திரலேகா. அப்படத்தை , பாகு பாலியுடன் ஒப்பிடுவது சரியல்ல! அதே மாதிரி பிரமாண்ட இயக்குனர் ஷங்கரை மிஞ்சி விட்டதாக என்னைப் பாராட்டுகிறார்கள். இதை ஏற்க முடியாது. ஷங்கர் புதிய தொழில்நுட்பத்தில் படத்தை இயக்கும்போது, எனக்கு கிரீன் மேட் எனும் தொழில்நுட்பம் கூட தெரியாது. அவரிடம் என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். ஷங்கருக்கு அடுத்து ராஜமௌலி என்று சொன்னால் கூட அந்தளவிற்கு உயர்ந்து விட்டேன் என்று சந்தோஷப்படுவேனே தவிர, ராஜமௌலிக்கு அடுத்துதான் ஷங்கர் என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஷங்கர்தான் எனக்கு முன்னோடி,” என்றார். சர்வதேச அளவில் தன் பாகுபலிக்கு பாராட்டுகள் குவிவது மகிழ்ச்சியளிப்பதாகவும், படமும் அந்த அளவுக்கு இருக்கும் என்றும் கூறினார் ராஜமவுலி., இரண்டு மணி நேரம் முப்பது நிமிடம் ஓடக் கூடிய “பாகுபலி படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாக உள்ளது. இதற்காக 300-க்கும் மேற்பட்ட நாட்கள் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம்.அதன் 2ஆம் பாகம் 35 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது.. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்கினோம்.இப்படத்தில் ஹீரோவை விட ஹீரோயினுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும். முதல் பாகத்தில் தமன்னா கதாநாயகியாக வருகிறார். அனுஷ்கா முதல் பாகத்தில் கொஞ்ச நேரம்தான் வந்து செல்வார்.இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா கதாநாயகியாகவும் தமன்னா சிறிதளவு வந்து செல்லும்படியாகவும் கதையமைத்திருக்கிறேன். இவர்கள் இருவரின் கதாபாத்திரமும் பவர்புல்லாக இருக்கும்.
இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே 150 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. சத்ய ராஜின் ஒத்துழைப்பு படத்தில் பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. இப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் மிகவும் கஷ்டப்பட்டு கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.இப்படத்தை உலகமெங்கும் ஜூலை 10ம் தேதி வெளியிட உள்ளோம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது,” இப்படம் உங்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாக இருக்கும் . இப்படத்தின் தொழில்நுட்பதுக்காக விருதுகள் குவியும் என்பதை இப்போதே கூற முடியும் இதற்காக வெளிநாடுகள் எல்லாம் போக வில்லை எல்லாம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது தான்! என்கிறார்.