‘இனிமே இப்படித்தான்‘ திரைப்படத்தின் கதாநாயகி ஆஷ்னா சவேரி கூறுகையில்” ‘இனிமே இப்படித்தான்’ படத்திற்கு கிடைத்துள்ள ஆதரவு எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. திரையரங்கில் ரசிகர்கள் சிரித்து, கைத்தட்டி ரசித்து வருகிறார்கள் என்பதை எங்கள் உழைப்பிற்கு கிடைத்த ஊதியமாக கருதிகிறேன்.” என்றவர், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ , ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்களில் சந்தானத்துடன்ஜோடி சேர்ந்து நடித்தது குறித்து கூறுகையில் “ ஒரு நடிகருடன் மீண்டும் மீண்டும் இணைந்து நடிப்பது இயல்பான விஷயம்.சந்தானம் போன்ற நல்ல நடிக்கக் கூடிய , நகைச்சுவை உணர்வுமிக்க ஒருவருடன் பணிபுரிவதற்கு எந்த கதாநாயகியும் எளிதில் ஒப்புக் கொள்ளக் கூடிய விஷயம்தான். மீண்டும் சந்தானத்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் மகிழ்ச்சி தான்! ” என்கிறார்..