சென்னை ராஜதானியாக இருந்த காலத்தில் இருந்தே தமிழர்களுக்கு அடுத்த எண்ணிக்கையில் இருந்தவர்கள் ஆந்திரர்கள்தான்.! அவர்களுக்காக தனி மாநிலம் அமைந்த பின்னர் தனியாக பிரிந்து போய் விட்டார்கள். திரை உலகில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தியதற்கு சாட்சியமாக சென்னையில் பிரசாத்,வாகினி ஆகிய இரு பெரு நிறுவனங்களின் மிச்சங்கள் இன்னும் இருக்கின்றன,
நோட்டா படத்தின் வழியாக திருக்குறளை சொல்லி தமிழுக்கு வந்திருக்கிறார் தேவரகொண்டா. தமிழ்த் தாய் வாழ்த்து யார் எழுதியது என்பது கூட தெரியாத கவிஞர்கள் வாழ்கிற சென்னையில் தேவரகொண்டா ஓர் அதிசயம்தான்.
“யாதும் ஊரே ,யாவரும் கேளிர் என்பது தமிழர்களின் தாரக மந்திரம். என்னைப் பொருத்தவரைக்கும் நான் நல்லா தமிழ்ப் பேசவேண்டும். தமிழ் கற்றுக் கொடுக்க ஒரு நல்ல கேர்ள் பிரண்ட் அமைஞ்சா போதும்.நடக்குமா என்று பார்க்கலாம்” என்கிறார் விஜய் தேவரகொண்டா.
“அரசியலுக்கு வருவீங்களா?”
“பணம். ஜாதி, மதம் பார்த்து ஓட்டுப் போடுகிற கலாச்சாரம் இங்கே இருக்கிறது. இத்தகைய சூழலில் என்னைப் போன்ற மென்மையான குணம் உள்ளவர்கள் இத்தகைய அரசியலுக்கு வருவது கஷ்டம். அதனால் வரமாட்டேன்.” என்கிறார்.