`இது சுசிகணேசனின் சுய விளக்கம் அண்ட் குற்றச்சாட்டு.
உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும் பன்றி, வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களைப் பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள்.
இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதைநிருபித்துவிட்டீர்கள். உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால், ஒருவேளை இந்தப் பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ.?
அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலேயே, ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும் புதுமைப் பெண்ணான நீங்கள், கத்தியை அந்த அப்பாவி (ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர்.
அத்தனையும் பொய் மூட்டைகள் என்பதை நிரூபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவற்றை வெளியிடுவதற்கு முன், என்னை கொச்சைப்படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன்.
இல்லையென்றால் கோர்ட்டு மூலமாக மான நஷ்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை, உன்னைப் போன்ற இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் `சமுதாய வைரஸ்களை’ களை எடுப்பதற்குப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
சமூக வலைத்தள இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்ற வக்ரபுத்தி கொண்டவர்களை அடையாளம்கண்டு தவிருங்கள்.
லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள். உதவி இயக்குநர்/பாடல் ஆசிரியர். இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை.
குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில், சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித்துப்பமுடியாமல், ஏனோ என்மீது வன்மத்தை துப்பியிருக்கிறார்.
கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூறையாடியிருக்கிறார். என் குடும்பம், வேதனையோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட்டு மூலம் கழுவும் வரை எந்தப் பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். என்று சுசி கூறி இருக்கிறார்.
இன்று மாலை சுசிகணேசன் தொடர்பான சேதிகளை சொல்வதற்கு சென்னை பிரஸ் கிளப்புக்கு வரச்சொல்லி இருந்தார் லீனா மணிமேகலை.
ஆனால் அதிகமான செய்திகளைச் சொல்ல வில்லை.
“சுசி கணேசனால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் பற்றிச் சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லை. அதைப் பாதிக்கப்பட்ட அவர்கள்தான் தானாக வெளியே சொல்ல வேண்டும். சுசி கணேசன் மேல் நான் வழக்குப் போடுவதற்குத் தயாராக இல்லை. அவர் என் மீது வழக்கு தொடர்ந்தால், அவர் போட்ட வழக்கு அவருக்கே பாதிப்பை ஏற்படுத்தும். அதற்காகத்தான் நான் காத்திருக்கிறேன். சினிமாத் தொழிலில் பிரபலமாக இருக்கும் ரஜினி, கமல் போன்றோர் அமைதியாக இருப்பது, தவறு செய்தோருக்கு பலமாகத்தான் அமையும். அவர்கள் மௌனத்தைக் கலைக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்