தற்போதெல்லாம் திரைப்பட விழாக்கள் என்றாலே இலக்கு இல்லாமல் நீண்டு கொண்டே போகிறது. சிலர் தங்களை இன, மொழி காப்பாளர்களாக நினைத்துக் கொண்டு பொங்குவார்கள். படத்தைப் பற்றிப் பேசாமல் ஊர் பிரச்னைகளை அலசுவார்கள். சினிமாவில் என்ன நடக்கிறது என்கிற உண்மை பற்றி பேசுவதில்லை. சிலர் பேசுகிறார்கள். அவர்களில் ஒருவர் கரு.பழநியப்பன்.
‘உத்தரவு மகாராஜா ‘என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழா. தமிழ் உச்சரிப்பு பிறழாமல் பேசுகிறவர்களில் ஒருவர் கரு.பழநியப்பன்.
“ஒரு தொலைக்காட்சியில் கதைத் திருட்டுப் பற்றி பேசக் கூப்பிட்டார்கள்.14 வயது சிறுமி பாலியல் வன்முறைக்குப் பலி ஆகி இருக்கிறாள் .அதைப் பற்றி கவலைப்படவில்லை.
கதைத் திருட்டு,.பணக்காரர்கள் சண்டை.
ஆனால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து நடக்கிற கொடுமைகளைப் பற்றி கவலைப் பட வேண்டாமா??”
சரியாகத்தான் சொன்னார் !