மீ டூ விவகாரத்தின் மூலம் ‘திடீர்’ பிரபலமான சின்மயி சமீபத்தில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனர் லீனா மணிமேகலை, நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சனி ஆகியோருடன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில்,பல கேள்விகளுக்கு பதிலளிக்க திணறியதால் கூட்டம் பாதியிலேயே முடிவடைந்து, சம்பந்தப்பட்டவர்கள் கலைந்து சென்று விட்டனர் .
இக்கூட்டம் குறிப்பாக பாடகி சின்மயி விவகாரத்திற்கு மட்டுமே நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இக்கூட்டத்தின் பின்னணி குறித்து நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தனது டுவிட்டர பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .அது இது தான் .
.” நான் தென்னிந்திய திரைப்படம் பெண்கள் அமைப்பு அழைத்ததன் பேரில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டேன். சின்மயிக்காகவோ, லீனாவுக்காகவோ இல்லை. அந்த அமைப்பிற்காக தான் சென்றேன்.ஏனென்றால் அவர்கள் பிரபலங்கள் கிடையாது. அவர்களின் குரல் இன்னும் கேட்கப்படவில்லை. சின்மயி பின்னர் தான் வந்தார். அவருக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு இருக்கிறது என்பதே தெரியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
I was invited for the #metoo pressmeet by South Indian film Womens asso, not by @Chinmayi @LeenaManimekali . Went for the association as they said becas they r not actors/ celebrities, their voice is not being heard . Chinmaye came late, she said she was not aware of pressmeet.
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) November 1, 2018