ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்-ம் சில நண்பர்களுடன் சேர்ந்து
குழுவாக படங்களை வாங்கி விநியோகம் செய்தோம். ஆண்பாவம், விடிஞ்சா
கல்யாணம், எங்க ஊரு பாட்டுகாரன், உள்ளே வெளியே, உள்ளத்தை
அள்ளித்தா-னு நிறைய படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்திங்க.
அதன்பின்பு லத்தீப்-யும் நானும் இணைந்து தனியாக பொற்காலம் படத்தை
விநியோகம் செய்தோம். அந்த படத்த பாராட்டி எழுதாத பத்திரிக்கைகளே
கிடையாது.தமிழ்நாட்டோட பெரிய ஏரியானு சொல்ற NSC-ல படங்களை வெளியிட்டோம்.
அவ்வளவு பெரிய ஏரியாவுல நாங்க நல்ல படங்களை ரிலீஸ் பண்ணாலும்,
நாங்க படத்தை மட்டும் தியேட்டருக்கு கொண்டுபோய் சேர்த்தோம்.
விஜய்-கூட சச்சின், திருப்பாச்சி, கத்தி, மெர்சல்னு பிரமிக்கிற வெற்றி
படங்களை விநியோகம் செய்தோம்.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் காலா, கமல் சாரோட உன்னைபோல்ஒருவன்.. இந்த தமிழ்சினிமாவோட அடையாளமா இருக்கிற படங்களைவெளியிட்டதுல எங்களுக்கு பெருமை.
விஷாலின் பாண்டியநாடு, பூஜை, ஆம்பள,தனுஷின் அது ஒரு கனாகாலம், தேவதையைகண்டேன், கொடி, விசாரணை.
சிம்புவோட குத்து, சரவணா, அச்சம் என்பது மடமையடா,
சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்,விஜய்சேதுபதியோட நானும் ரவுடிதான்
ஜீவாவின் ராம்,சசிகுமாரின் சுப்ரமணியபுரம், சுந்தரபாண்டியன்,
சமுத்திரகனியின் அப்பா,
கேப்டன் விஜயகாந்தின் கள்ளழகர்,
முரளியின் பூந்தோட்டம்,
பார்த்திபனின் வெற்ற்கொடிகட்டு, அழகி
இப்படி கிட்டதட்ட மூணு தலைமுறை நடிகர்களோட படங்களை நாங்கள்
வெளியிட்டு இருக்கோம்.
விநியோகத்துல் எங்களுக்கு கிடைச்ச வெற்றிக்கு பிறகு நாங்க தயாரிப்புல
இறங்கினோம்.
சசிகுமார் நடிச்ச வெற்றிவேல் படம் எங்கள் முதல் தயாரிப்பு, அதன்பிறகு
சிவலிங்கா படத்தை தயாரிச்சோம்.
மற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து விக்ரம் வேதா, அவள், லஷ்மி,
தமிழ்படம் 2, அறம், ராட்சசன்-னு இந்த வருஷமும், போன வருஷமும்
வெளியான முக்கியமான படங்களை தயாரிச்சிருக்கோம்.இப்போ மற்ற தயாரிப்பாளர்களோட இணைந்து சீதக்காதி, ஆயிரா, தேவி 2,
தில்லுக்கு துட்டு 2, கமல் சாரோட இணைந்து விக்ரம் நடிக்கிற படங்களை
தயாரிச்சுகிட்டு இருக்கோம்.
இதுமட்டுமில்லாம இன்னும் சில படங்கள் தயாரிப்புல இருக்கு. அந்த
அறிவிப்புகளை கூடிய சீக்கிரம் வெளியிடுவோம். நாங்க விநியோகம் பண்ண
ஆரம்பிச்சு 25 வருஷம் ஆயிருச்சு.
550 படங்களுக்கு மேல வெளியிட்டு இருக்கோம்.
இந்த நவீன காலத்துக்கு ஏற்ப Digital-லயும் Trident Arts களம் இறங்கியிருக்கு.Web Series-யும் தயாரிச்சு வெளியிடுகிறோம் என்கிறார் டிரைடன்ட் ரவீந்திரன்..