நம்பிக்கையோடு தமிழுக்கு வந்தவர் விஜய் தேவரகொண்டா.
திருக்குறள் சொன்னார். தமிழ் நடிகர்களில் சிலருக்கு தமிழ்த் தாய் வாழ்த்தே தெரியாத நிலையில் இவர் திருக்குறள் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.
இவரது டாக்சிவாலா 17 ம் தேதி ரிலீஸ். ஆனால் ஒளிப்பதிவு இல்லாமல் சிஜி எபெக்ட்ஸ் இல்லாமல் படத்தை களவாணிகள் வெளியிட்டு விட்டார்கள். காண்டாகி விட்டார் விஜய் தேவரகொண்டா.
“ரசிகர்களே, படத்தை வேற்றி பெறச்செய்யுங்கள். அந்த திருட்டு பயல்களுக்கு நடு விரலைக் காட்டுங்கள். புத்தி வரட்டும்!” என்று சொல்லி இருக்கிறார்.