“நான் ராஜாவாகத்தான் வருவேன்” படத்துக்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்திருக்கும் குடைச்சல் பற்றி சிம்புவின் ரசிகர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.
சிம்புவின் மீதான பஞ்சாயத்து பற்றி கவுன்சிலும்,தயாரிப்பாளர் சங்கமும் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோபத்தை கொட்டி வருகிறார்கள். அவர்களை அமைதிப் படுத்திக் கொண்டிருக்கிறார் எஸ்.டி.ஆர்.
“கோபம் காட்டாதே! குணவானாக இரு.!எதுக்காக குறி வச்சு அடிக்கிறே? வேணாம்.எல்லாம் நல்லபடியா முடியும்.நீ இல்லாம நான் இல்ல. நம்ம கடமையை செய்வோம் .கட்டுப்பாடா இருப்போம். நல்ல பலன் நமக்குத்தான். என்னவாக இருந்தாலும் உன்னை பொங்கலுக்கு சந்திக்கிறேன் .வந்தா ராஜாவாகத்தான் வருவேன்.உறுதி.வரட்டா!”என்று தனது ரசிகர்கள் ஆதரவாளர்களுக்கு சொல்லி இருக்கிறார்.