விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாகிறது. ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்கிறார்.அரிகரன் என்ற பெயர் சூட்டப்பட்டு பின்புஅனைவராலும் தம்பி என்று அழைப்பட்டமேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளான இன்று அவரின் வாழ்க்கை வரலாறான “சீறும் புலி” திரைப்படத்தின் முதல் பார்வை இதோ !!!இத்திரைப்படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தை எழுதி இயக்குகிறார் வெங்கடேஷ் குமார் ஜி .இவர் ஏற்கனவே உனக்குள் நான், லைட்மேன் ஆகிய படங்களையும் இலங்கையில் நடந்த கடைசிகட்ட போரை மையமாக வைத்து நீலம் என்ற படத்தையும் இயக்கியவர்.நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவரின் வாழ்க்கை மற்றும் ஈழப்போர் தொடர்பில் இதற்கு முன்பும் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து “சீறும் புலிகள்” படம் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.