தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் கே பாலசந்தர். இவரை இயக்குனர் சிகரம் என பலரும் புகழ்ந்துள்ளனர். இவர் மனைவி ராஜம் பாலசந்தர். இவர் தனது மகள் புஷ்பா கந்தசாமியுடன் இணைந்து பல படங்களை தயாரித்துள்ளார். இயக்குனர் கே பாலசந்தர் கடந்த 2014 அம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி காலமானார்.இந்நிலையில்,இவரது மனைவி ராஜம் (வயது 84) . இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவுடன் இருந்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை அவர் 4.30 மணியளவில் காலமானார்.இவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர்.இவரது இறுதி சடங்கு இன்று மாலை நடக்கிறது . ராஜம் பாலசந்தர் உடலுக்கு திரையுலகினர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்,