தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தைச் சேர்ந்த பெப்சி தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சனை காரணமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை, வெளியூர், வெளிநாடுகளில் நடந்து வந்த அனைத்து தமிழ் படங்களின் படப்பிடிப்புகள், இதர வேலைகள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகளுக்கும், தொழிலாளர் சம்மேளனத்திற்கும் (ஃபெப்சி) இடையில் கடந்த 3 நாட்களாக ஃபிலிம் சேம்பரில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பினருக்கும் இடையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து படப்பிடிப்பு வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து நாளை 31-7-2015 (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் படப்பிடிப்பு மற்றும் அனைத்து படப்பிடிப்பு பணிகளை வழக்கம் போல் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புதிதாக அமைக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் விதிகளை தயாரிப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விசாரித்து தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.