சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூர்யா38’ படத்தின் பூஜை இன்று காலை நடந்தது. இன்னும் பெயரிடப்படாத இப் படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்குகிறது.
சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ‘சீக்யா எண்டர்டெயின்மெண்ட்’ குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.
இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்குபெறுகிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றுகிறார். படத்தொகுப்பிற்கு சதீஷ் சூர்யாவும், உடைகளுக்கு பூர்ணிமா ராமசாமியும் பொறுப்பேற்றுள்ளனர் . இணை தயாரிப்பு ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.