ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி, துல்கர், ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர்.கதாநாயகி நடிகைகள் தேர்வு நடந்து வந்தது இதில் பாலிவுட் நடிகைகள் உள்பட பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு தற்போது கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஓ காதல் கண்மணி படத்தில் லைவ் சவுண்ட் என்கிற ‘சிங்க் சவுண்ட்’ முறையைப் பயன்படுத்திய மணி ரத்னம், இப்படத்திலும் அம்முறையை பயன் படுத்த விரும்பியதால்,‘இதற்கு தமிழ் தெரிந்த நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என மணிரத்னம் முடிவு செய்தார். இதன் காரணமாகவே இது என்ன மாயம்,ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் நன்றாகத் தமிழ் பேசுபவர் என்பதால்அவரை தேர்வு செய்தாராம். தற்போது, இரண்டாவது நாயகிக்கான தேர்வு நடந்து வருகிறது’ என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப் படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் ஆரம்பமாகிறது.