
மும்பையில் சூப்பர் ஸ்டார் ரஜினி,நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குநர் ஏஆர்.முருகதாஸ் படமாக்கிக் கொண்டிருக்கிறார்.
பலத்த பாதுகாப்புகள் இருந்தாலும் அவர்களுக்குள்ளேயே சில நல்லவர்களும் இருப்பார்கள் அல்லவா.!
ரசிகர்களின் ஆர்வத்துக்கு தீனி போடும் மகராசன்கள் அவர்கள்தான்! அவ்வப்போது சாமர்த்தியமாக படங்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்கள்.
அது படப்பிடிப்புக் குழுவுக்கு பிடிக்கவில்லை.
அந்த நல்லவர்களை வலைவிரித்து தேடிவருகிறது. அவர்கள் மாட்டக்கூடாது என்பதுதான் ரசிகனின் பிரார்த்தனை.












